தேவர் ஜெயந்தி: அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil


முதுகுளத்தூர்: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்பேத்கர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் நடக்கவிருந்த தேவர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, திராவிட விழிப்புணர்வு கழகத் தலைவர் பி.டி.குமார் ஆகியோர் மர்ம கும்பலால் தாக்கப்பட்டனர்.

முன்னதாக பி.டி.குமாரைத் தாக்க இருந்தவர்கள் தவறுதலாக கிருஷ்ணசாமியைத் தாக்கியுள்ளனர். பின்னர் குமாரையும் தாக்கியுள்ளனர். குமார் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

இன்று தேவர் ஜெயந்தி நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைக்கு அதிக பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து அம்பேத்கர் சிலைகளுக்கும் தேவர் ஜெயந்தி முடியும் வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூடுதல் டிஜிபி விஜயகுமார் முதுகுளத்தூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+