பெரியார் எழுதிய 'சச்சி ராமாயணம்'-பாஜக எரிப்பு போராட்டம்

Subscribe to Oneindia Tamil


லக்னோ: பெரியார் எழுதிய சச்சி ராமாயணம் என்ற நூலை இன்று லக்னோவில் பாரதிய ஜனதா தொண்டர்கள் எரித்துப் போராட்டம் நடத்தினர்.

ராமாயணம் குறித்த உண்மையை வெளிப்படுத்தி தந்தை பெரியார் தனது பாணியில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்த நூல் சச்சி ராமாயணம் என்ற பெயரில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் ராமர் குறித்து அவதூறாகக் கூறப்பட்டிருப்பதாக கூறி பாஜக மற்றும் பிற சங் பரிவார் அமைப்புகள், இந்த நூலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் புத்தகம் வெளி வந்து இத்தனை காலம் கழித்து பாஜகவினர் நூலுக்கு எதிர்ப்பது நியாயமற்றது, புத்தகத்தை தடுக்க தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று உ.பி. முதல்வர் மாயாவதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பாஜக மூத்தத் தலைவர் அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர், பெரியார் எழுதிய சச்சி ராமாயணம் நூலின் விற்பனையைத் தடுக்குமாறு பாஜக தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று லக்னோவில் உள்ள சட்டசபை வளாகம் முன்பு பெரியாரின் சச்சி ராமாயணம் புத்தகத்தை பாஜகவினர் எரித்து போராட்டம் நடத்தினர். மேலும் பெரியாரை ஆதரிக்கும் மாயாவதி அரசை கடுமையாக விமர்சித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+