துபாயில் இந்திய தொழிலாளி பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தொழிற்சாலையில் இருந்து கீழே தவறி விழுந்த இந்தியத் தொழிலாளி பலியானார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் சலீம் அப்துல் அஜீஸ் (40). சலீமுக்கு திருமணமாகி மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர் துபாய் அருகேயுள்ள அல் அய்ன் சிட்டி சிமெண்ட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 16 வருடங்களாக இந்த நிறுவனத்தில் வேலை பார்தது வரும் சலீம் கடந்த வெள்ளியன்று தொழிற்சாலையில் நீர் கசிவு சம்பந்தமான பணிக்காக உயரமான இடத்திற்கு சென்றார்.
அப்போது சலீம் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.












Click it and Unblock the Notifications