கிருஷ்ணசாமி மீதான தாக்குதல்: 3 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
பரமக்குடி: காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது, ஒரு கும்பலால் வழிமறித்து தாக்கப்பட்டார். வேல் கம்பால் அவரைக் குத்தியதில் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டது. தற்போது மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணசாமியைத் தாக்கிய கும்பலை போலீஸார் பல்வேறு தனிப்படைகள அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், லிங்குச்சாமி, ராமலிங்கம் உள்ளிட்ட 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களை பரமக்குடி காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications