விளக்கு வெடித்து தாய், மகள் பலி !
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் தோகமலையில் விளக்கு வெடித்ததால் தாயும் மகளும் பலியாயினர்.
முருகேசன்-முத்துலட்சுமி தம்பதியின் மகள் ரூபா. ஒன்பது வயதான ரூபா அருகில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தப் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வருவதால் நேற்று இரவு ரூபாவின் தாயார் முத்துலட்சுமி மகள் படிக்க வீட்டில் இருந்த சிமினி விளக்கை பற்ற வைக்க முயன்றார்.
அப்போது சிமினி விளக்கு தீப்பிடித்து வெடித்தது.

இதில் முத்துலட்சுமியும், ரூபாவும் படுகாயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமியும் ரூபாவும் பலியாயினர்.
இதுகுறித்து தோகமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications