கிருஷ்ணசாமி தாக்குதல்: ஐஏஎஸ் அதிகாரி விசாரணை தொடக்கம்
மதுரை: காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பரூக்கி தனது விசாரணையை இன்று தொடங்குகிறார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 29ம் தேதி முதுகுளத்தூர் அருகே கீழ் கண்ணிச்சேரி என்ற இடத்தில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். வேல் கம்பால் அவர் தாக்கப்பட்டதில், பலத்த காயமடைந்தார்.
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணசாமி தற்போது ஓரளவு தேறியுள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணசாமி தாக்குதல் தொடர்பாக விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி பரூக்கியை தமிழக அரசு நியமித்துள்ளது. பரூக்கி வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.
தனது விசாரணை அறிக்கையை அரசிடம் 15 நாட்களுக்குள் பரூக்கி தாக்கல் செய்வார்.
முதுகுளத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கப்பட்டிருந்ததா, கிருஷ்ணசாமி பயணம் செய்த சாலையில் அவர் வருவது குறித்து காவல்துறையினருக்கு முன்பே உரிய முறையில் தெரிவிக்கப்பட்டிருந்ததா, பாதுகாப்பில் குளறுபடி இருந்ததா என்பது உள்ளிட்டவை குறித்து பரூக்கி விசாரணை மேற்கொள்வார்.












Click it and Unblock the Notifications