மகளை இருட்டறைக்குள் சிறை வைத்த தாய்!
அனந்தபூர்: திருமணத்திற்கு மறுத்த மகளை வீட்டில், இருட்டறைக்குள் அடைத்து வைத்த தாயிடமிருந்து, அந்தப் பெண்ணை கிராம மக்கள் மீட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம், அனந்தபூரைச் சேர்ந்தவர் சரோஜினி. இவர் அனந்தபூர் நகராட்சியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகாத சுஜாதா என்ற மகள் இருக்கிறார்.
சரோஜினி, சுஜாதாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் சுஜாதா திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மகளை கடந்த 6 மாதங்களாக தனி அறையில் அடைத்து வைத்து சிறிய துவாரம் வழியாக சாப்பாடும், தண்ணீரும் கொடுத்து சித்திரவதை செய்து வந்துள்ளார் அந்தக் அந்த கொடூர தாய்.
கடந்த மூன்று நாட்களாக சரோஜினி ஊரில் இல்லை. வெளியூர் போய் விட்டார். இதனால் அறைக்குள் அடைபட்டிருந்த சுஜாதா பசியால் அலறி துடித்துள்ளார். சத்தம் கேட்ட கிராம மக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று, இருட்டறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுஜாதாவை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த 6 மாதங்களாக ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த காரணத்தால், சுஜாதா மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications