For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்-பெரியார் திகவினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன் இன்று ஆர்ப்பாட்டம் செய்த பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2ம் தேதி நடந்த விமான தாக்குதலில் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஏராளமானோர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசைக் கண்டித்து சென்னை, கஸ்தூரிரங்கா ரோட்டில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X