கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சிறுமி மீட்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள கொல்லூர் கிராத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு திருமணமாகி அஞ்சலை என்ற மனைவியும், கிருஷ்ணவேணி என்ற மகளும் இருக்கிறார்கள். மகள் கிருஷ்ணவேணி பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.
ராமகிருஷ்ணன்-அஞ்சலை தம்பதியினர் தங்கள் மகளை அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று பொட்டு கட்டி கோவிலுக்கு நேர்ந்து விட்டனர். சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு வந்தனர். நேர்ந்துவிடப்பட்ட அந்த சிறுமி வீட்டில் சேர்க்கப்பட மாட்டார்.
இந்தத் இந்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த சிறுமியை மீட்டு தந்தை ராமகிருஷ்ணனை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுமியும், அவரின் தாய் அஞ்சலையும் விழுப்புரத்தில் உள்ள தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
சிறுமி கிருஷ்ணவேணிக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications