இலங்கை கடற்படைக்கு அமெரிக்க ரேடார்கள்
கொழும்பு: இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா ரேடார்களை வழங்கியுள்ளது.
இதன்மூலம் கடல் பகுதியில் கண்காணிப்பை இலங்கை கடற்படை தீவிரமாக்க முடியும்.
திரிகோணமலை கடற்படைத் தளத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் இந்த ரேடார் கருவிகளையும், நவீன ரக படகுகளையும் வழஙகினார்.
இலங்கை கடற்படையின் கமாண்டரான வைஸ் அட்மிரல் வசந்தா கரன்னகொடா இவற்றைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிளேக், அமெரிக்காவால் 1977ம் ஆண்டில் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட எல்டிடிஈ இயக்கத்தின் ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தக் கருவிகள் உதவும் என்றார்.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகளவில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையின் இவை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு முயல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
போலீஸ்காரர் சுட்டு கொலை:
இதற்கிடையே இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கை தேசிய பட்ஜெட் 2 நாட்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்சேவால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு பலத்த பாதுகாப்பு மிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிக் குண்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த போலீஸ்காரரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தற்கொலையா அல்லது யாரேனும் சுட்டுக் கொன்று விட்டனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications