பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் மாரடைப்பில் மரணம்
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் மாரடைப்பில் இறந்தார்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் தூத்துக்குடியைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் செல்லத்துரை ஈடுபட்டிருந்தார்.
மாலையில், வீட்டுக்குச் செல்ல ஆயத்தமானார். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் செல்லத்துரை இறந்து விட்டதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications