ஏரல் அருகே பட்டதாரி பெண் குத்தி கொலை
ஏரல்: ஏரல் அருகே இன்று காலை கம்யூட்டர் சென்டர் பெண் ஊழியர், அவரது அக்காள் கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கோட்டைக்காடு கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் இல்லங்குடி. இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி கனகமணி. இவர்களுக்கு பால்கனி, செல்வகுமாரி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
பால்கனியை கடந்த 3 மாதங்களுக்கு முன் சிவகளை கீழத் தெருவைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் ஞானமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். ஞானமணி கூலி வேலை செய்து வந்தார். இரண்டாவது மகள் செல்வகுமாரி சாயர்புரம் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து விட்டு ஏரலில் உள்ள கம்யூட்டர் சென்டரில் வேலை செய்து வந்தார்.
தீபாவளிக்கு புதுமண தம்பதிகள் கோட்டைக்காடு வந்து பண்டிகையை கொண்டாடினர். அதன் பிறகு நேற்று காலை அவர்கள் சிவகளை திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை ஞானமணி, மனைவியிடம் தான் வேலைக்கு தூத்துக்குடி செல்ல இருப்பதாகவும், சமையல் செய்து வைக்கும்படியும் கூறிவிட்டு வெளியே சென்றார். அங்கிருந்து நேராக கோட்டைக்காட்டில் உள்ள மாமனார் வீட்டிக்கு வந்தார்.
வீட்டுக்கு வந்த மருமகனிடம் இல்லங்குடி என்ன விசயம் என்று கேட்டார். அப்போது ஞானமணி நான் முதலில் குளிக்க வேண்டும். வெண்ணீர் வைத்து தாருங்கள் என்று கூறவே மாமியார் கனகமணி வாய்காலில் தண்ணீர் எடுக்க சென்றார்.
வீட்டில் இல்லங்குடியும் செல்வகுமாரியும் இருந்தனர். அப்போது அவர்களிடையே ஏதோ பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. தந்தைக்காக செல்வகுமாரி பரிந்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஞானமணி வாழை இலை அறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து மைத்துனி செல்வகுமாரியை சரமாரியாக குத்தினார்.
இதில் கழுத்து உள்பட 4 இடங்களில் கத்திக் குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சிறிது நேரத்தில் துடிதுடி இறந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications