தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாது - உயர்நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டடப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்குத் தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் அனுமதி பெறாமல் விதிமுறைகளுக்குப் புறம்பாக கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதனால் பல கட்டடங்கள் இடிப்பிலிருந்து தப்பின.
அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து நுகர்வோர் அமைப்பு ஒன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.
அதில், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications