ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே கட்டுமானத் தொழிலாளரும் அவரது காதலியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெல்வின் ராஜ் (25). கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்த வெல்வின் ராஜின் காதலி ரேவதி (20). இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால் மனம் உடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தனர். இதையடுத்து இருவரும் மஞ்சம்பட்டி கிராமம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
ரயில்வே போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications