வங்கக் கடலில் புதிய புயல்: தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயலால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் போர்ட் பிளேருக்கு கிழக்கே புதியதாக ஒரு புயல் உருவாகியுள்ளது. சக்தி வாய்ந்த இந்த புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் கடலோரத் தமிழகத்தில் லேசான மழை இருக்கலாம். இருப்பினும் பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும். அதனால் மீனவர்கள் எவரும் கடலுக்கும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் 2வது எண் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.
புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications