சென்னை-டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் வரை நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை-டெல்லி நிஜாமுதீன் ஏழைகளின் ரதம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் திருவனந்தபுரம் வரை நீடிக்கப்படுகிறது.
குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயில் இப்போது சென்னை சென்ட்ரல் முதல் டெல்லி நிஜாமுதீன் இடையே ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயிலில் 3 அடுக்கு வசதி கொண்ட 13 ஏ.சி பெட்டிகளும், அமர்ந்து பயணம் செய்யும் 5 சேர் கார்களும் உண்டு.
இந் நிலையில் இந்த ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிக்கவுள்ளது தென்னக ரயில்வே. இதனால் 1 பெட்டியில் 64 படுக்கைகளுக்குப் பதிலாக 75 படுக்கைகளாக அதிகரிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் தமிழகத்துக்கான இன்னொரு ரயிலையும் கேரளம் சுவாஹா செய்துவிட்டது.












Click it and Unblock the Notifications