தாய் வீட்டில் திருடிய மகளுக்கு வலை
சாத்தான்குளம்: தாய் வீட்டில் நகை, பணம் திருடிய மகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆர்.சி. வடக்கு தெருவில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி பத்ரகாளி. இவரது மகள் ஜெயசீலியை அதே தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
கணவர் இறந்துவிட்டதால் பத்தரகாளி தனியாக வசித்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் திடீரென்று உடல் பாதிக்கப்பட்டதால் மகள் ஜெயசீலியை அழைத்து வந்து தன்னுடன் வைத்து கொண்டார்.
சில நாட்களில் தாய்-மகள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மகளை விரட்டியடித்து விட்டார்.
தாய் தன்னிடம் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த ஜெயசீலி சம்பவதன்று பத்ரகாளி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அங்கு சென்று பீரோ பூட்டை உடைத்து 4 சேலை, ரூ.4 ஆயிரம் மற்றும் அரை பவுன் மோதிரம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டார்.
இது பத்ரகாளிக்கு தெரிய வரவே அவர் சாத்தான் குளம் போலீசில் புகார் செய்தார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து பத்ரகாளி சாத்தான்குளம் கோர்ட்டில் வழக்கு போட்டார். நீதிபதி ஜாய் ஜோசப் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி