ஜெ. வீட்டருகே பிடிபட்டவர் மன நோயாளி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டு அருகே நடமாடிய மன நோயாளியை போலீஸார் பிடித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகே அடிக்கடி மர்ம நபர்கள் சிக்கி வருவதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இதுவரை நான்கு மர்ம நபர்கள் ஜெயலலிதா வீட்டின் அருகே பிடிபட்டுள்ளனர். இதில் ஜோஷ்வா என்ற நபர் ஒரே ஆண்டில் இருமுறை ஜெயலலிதா வீட்டுக்கு மர்மமான முறையில் வந்து பிடிபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு மர்ம நபர் ஜெயலலிதா வீட்டுக்கு அருகே நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை இந்த நபர் ஜெயலலிதா வீடு உள்ள பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த போலீஸார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசினார். பின்னர் தனது பெயர் பார்த்தசாரதி என்றும், தாம்பரத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறிய முகவரியைத் தொடர்பு கொண்ட போலீஸார் குடும்பத்தினரை வரவழைத்தனர். குடும்பத்தினர் விைரந்து வந்து அவர் மனநோயாளி என்றும், பலத்த பாதுகாப்புடன் வீட்டில் இருந்த அவர் எப்படியோ தப்பி வந்து விட்டதாகவும், கூறினர்.
இதையடுத்து பார்த்தசாரதியை போலீஸார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பார்த்தசாரதி மன நோயாளி என்று போலீஸாரிடம் அவருடைய குடும்பத்தினர் எழுதிக் கொடுத்து விட்டு அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications