அதிமுக பிரமுகர் கொலை - 12 பேருக்கு இரட்டை ஆயுள்

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: அதிமுக பிரமுகர் அம்பத்தூர் எம்.ஆர்.ரவி படுகொலை வழக்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் உள்ளிட்ட 11 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னை அம்பத்தூர் நகர அதிமுக செயலாளராக இருந்தவர் எம்.ஆர்.ரவி. ரியல் எஸ்டேட் பிசினஸையும் செய்து வந்தார்.

கடந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி தனது அலுவலகத்தில் ரவி இருந்தார். அப்போது ஒரு கும்பல் அங்கு வந்து ரவியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நாகூர் மீரான் என்பவர் விசாரணைக் காலத்தின்போது இறந்து விட்டார். மற்றவர்கள் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவாட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜ் நேற்று அளித்த தீர்ப்பில், முகப்பேர் ஏ.ராஜா உள்ளிட்ட 12 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார்.

மேலும் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

முக்கியக் குற்றவாளியான ராஜா, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆதிமூலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+