உலகின் 'படா' இந்திய கோடீஸ்வரர் மிட்டல்!
லண்டன்: உலகின் மிகப் பெரிய இந்திய கோடீஸ்வரர் என்ற பெருமையை ஸ்டீல் நிறுவன அதிபர் லட்சுமி மிட்டல் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு உலகின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி பெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை முகேஷ் மறுத்தார். மேலும் இதுதொடர்பான பட்டியலை வெளியிடும் போர்ப்ஸ் இதழும் முகேஷ் உலகின் மிகப் பெரிய பணக்காரர் என அறிவிக்கவில்லை.
இந் நிலையில் போர்ப்ஸ் இதழ் உலகின் மிகப் பெறும் பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மிகப் பெரிய இந்திய பணக்காரராக லட்சுமி மிட்டல் இடம் பெற்றுள்ளார்.
மும்பை பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் வளர்ச்சியின் காரணமாக மிட்டல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 51 பில்லியன் டாலர்.
இந்திய கோடீஸ்வரர்களில் முதல் நான்கு பேரின் சொத்து மதிப்பு மட்டும் 181 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த ஆண்டை இரண்டு மடங்குக்கும் கூடுதலாகும்.
ஆசிய அளவில் இந்தியாவிலிருந்து 40 பேர் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்து புதிய சாதனையையும் படைத்துள்ளனர்.
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிட்டல் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 51 பில்லியன் டாலராகும்.
முகேஷ் அம்பானி 49 பில்லியன் டாலர் சொத்துடன் 2வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 30.5 பில்லியன் டாலரிலிருந்து 49 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
3வது இடத்தில் அனில் அம்பானி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 45 பில்லியன் டாலராகும். இவரது சொத்து முன்பு 30.2 பில்லியன் டாலராக இருந்தது.
டி.எல்.எப் நிறுவன அதிபர் குஷால் பால் சிங் 35 பில்லியன் டாலர் சொத்துடன் 4வது இடத்தில் உள்ளார். மேலும், உலகின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் அதிபராகவும் இவரது நிறுவனம் உயர்ந்துள்ளது.
உலகின் மிகப் பெறும் பத்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிட்டல் 5வது இடத்தில் உள்ளார்.
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள 29 பேர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிகப் பெரும் அளவில் பண மதிப்பை ஈட்டியுள்ளனர். இதில் ராகுல் பஜாஜின் சொத்து மதிப்பு மட்டும் உயராமல் நிலையாக உள்ளது.
கெளதம் அடானி, ஆனந்த் ஜெயின் (இவர் முகேஷ் அம்பானியின் பள்ளித் தோழர்), கெளதம் தாப்பர், நிரஞ்சன் ஹிரனண்டாணி, ராகேஷ் வத்வான், ஆகியோர் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications