வாக்காளர் பட்டியலில் மாணவர்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கல்லூரிகளுக்கு வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்களை அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு ெசய்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி தொடங்கவுள்ளது. இந்தப் பணியின் ஒரு கட்டமாக 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்கள் அனைவரையும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அதன்படி அனைத்துக் கல்லூரிகளுக்கும் வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும். 18 வயது நிரம்பிய மாணவர்கள் தங்களது விவரங்களையும், புகைப்படங்களையும் இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம்.
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில், புதிதாக பெயர்களை சேர்ப்பதற்கு வசதியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படுகிறது.
தேர்தல் கமிஷனின் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் இ-மெயில் செய்தால், பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த விண்ணப்பத்தில் அலுவலர்கள் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று கையெழுத்துப் பெற்றுச் செல்வர். பின்னர், பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.
தனது மாணவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லுாரி சிறப்பு முயற்சி எடுக்கவுள்ளது.
18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக பெற்றுத் தரும் பணியை இக்கல்லூரி மாணவிகள் செய்வர்.
இதற்காக, சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முகவரி, தொலைபேசி மற்றும் பேக்ஸ் எண்கள் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெற உள்ளனர் என்றார் நரேஷ்குப்தா.












Click it and Unblock the Notifications