பெரு, ஈக்வடார் நாடுகளில் பயங்கர நிலநடுக்கம்
பெரு: தென் அமெரிக்க நாடுகளான பெரு மற்றும் ஈக்வடாரில் இந்திய நேரப்படி இன்று காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஈக்வடார் நாட்டின் தலைநகரமான குய்டோவிலிருந்து தென்கிழக்கு திசையில் 245 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய நேரப்படி இன்று காலை 8.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்ச்சி பெரு நாட்டிலும் இருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் அனைத்தும் பயங்கரமாக ஆடியது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது அந்நாட்டில் இரவு நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் நடந்த சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இவற்றின் அருகாமையில் உள்ள சிலி நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டு 2 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications