சச்சின் டெண்டுல்கருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
இந்தூர்: இந்திய மூவர்ணகொடி போன்ற வடிவம் கொண்ட கேக்கை வெட்டிய சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஜமைக்கா தீவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கேக் வெட்டினார்.
இந்த கேக் இந்தியாவின் மூவர்ண கொடியை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இதனை இந்தியரான சச்சின் வெட்டி கொண்டாடியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
இதனால் இந்தியாவை அவமதித்ததாக கூறி அவர் மீது இந்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வரும் டிசம்பர் 3ம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications