மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் சேர்க்க வாணியர் சங்கம் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தங்களை மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வாணிய செட்டியார்கள் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வாணியர் கூட்டமைப்பின் நிறுவனரும், தலைவருமான ஆர்.பன்னீர் செல்வம் மற்றும் மாநில பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் 55 லட்சத்திற்கும் மேற்பட்ட வாணியர் செட்டியார் சமூகத்தினர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளனர்.
இதனால் இச் சமூகத்தினரை தமிழக அரசு மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
சென்னையில் வாணியர் ஐஏஎஸ் பயிற்சி அகாடமி ஒன்றும் துவக்கப்படும். இதில் 2008ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்விற்கு வாணிய செட்டியார் சமூகத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications