உக்ரைனில் சுரங்கம் இடிந்து 70 பேர் பலி
உக்ரைன்: உக்ரைன் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட மீத்தேன் வாயுக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 70 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உக்ரைன் நாட்டின் டோனட்சிக் பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இதில் பூமியிலிருந்து 1,250 மீட்டர் ஆழத்தில் (3,800 அடி ஆழம்) 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது சுரங்கத்திற்குள் மீத்தேன் வாயு கசிந்தது. வாயு கசிந்த சிறிது நேரத்தில் அது வெடித்ததில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அந்த இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 100 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிவிட்டனர்.
உடனே மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுவரை 70 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இன்னமும் 30 பேரை காணவில்லை.
இந்த விபத்தில் காயமடைந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications