பிற்பட்ட-சிறுபான்மை சமூக மாணவிகளுக்கு இலவச ஏர்-ஹோஸ்டஸ் பயிற்சி
சென்னை: தாழ்த்தப்பட்ட மாணவிகளைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கும் இலவச விமானப் பணிப் பெண்கள் பயிற்சியளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு வெற்றிகரமாக ஏர்-ஹோஸ்டஸ் பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியில் தேறிய பெரும்பாலான மாணவிகளுக்கு வேலை வாய்ப்பையும் அரசு பெற்றுத் தந்தது.
இந் நிலையில் இத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவிகளுக்கும் அரசு விரிவாக்கவுள்ளது.
முதல் கட்டமாக இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 200 மாணவிகளுக்கு பயிற்சி தரப்படும். இதற்காக ரூ. 1.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தவிர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூக மாணவ-மாணவிகளுக்கு ரூ. 10 கோடி செலவில் பிற 40 வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்படும் என்றார்.
2007-08ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தின் சார்பில் 15,000 பேருக்கு ரூ. 14 கோடி கடனுதவியும், சிறுபான்மையினர் பொருளாதார நல வாரியத்தின் சார்பில் 5,000 பேருக்கு ரூ. 9 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications