ரிலையன்ஸ் விற்பனை நிலையம் மீது பாரதிய ஜன சக்தியினர் தாக்குதல்
போபால்: மத்தியப் பிரதேசத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையங்களின் மீது பாரதிய ஜனசக்தி கட்சி தொண்டர்கள் இன்று தாக்குதல் நடத்தினர்.
பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் இப்போது சில்லரை வர்த்தகத்தில் நுழைந்து வருகின்றன. ரிலையன்ஸ், பேன்தலூன் மற்றும் டிரைநேத்ரா போன்ற பெரிய நிறுவனங்கள் முக்கிய நகரங்களில் சில்லரை விற்பனை நிலையங்களை வரிசையாக நிறுவி வருகின்றன.
இது தவிர ஏராளமான நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் நுழைய தயாராக இருக்கின்றன.
பெரிய நிறுவனங்கள் இப்படி சில்லரை வர்த்தகத்தில் நுழைவதால் சிறு வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறி தமிழகம், கேரளா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந் நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு சில்லறை விற்பனை நிலையத்தின் மீது பாரதிய ஜனசக்தி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இது குறித்து பாரதிய ஜனசக்தி கட்சியின் தலைவர் உமா பாரதி கூறுகையில், தனது கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்த முழு உரிமை கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications