தவறி விழுந்து ஜோதிபாசு காயம்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் மேற்கு வங்க மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான ஜோதிபாசு தவறி விழுந்து காயமடைந்தார்.
94 வயதாகும் ஜோதிபாசுவின் இல்லம் கொல்கத்தாவில் உள்ளது. அவரது வீட்டின் பெயர் இந்திரா பவன்.
இன்று அவர் தனது இல்லத்தில் தவறி விழுந்து விட்டார். இதில் அவரது இடுப்பில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது.
அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜோதிபாசு நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications