கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட வரதராஜன் நேற்றிரவு திண்டுக்கல்லுக்கு சென்றார். இன்று காலை தூங்கி எழுந்தவுடன் அவருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.
இதனால் சோர்வுடன் இருந்த அவரை கட்சி தொண்டர்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் தான் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டதாக கூறினர்.
பின்னர் டாக்டர்கள் சிகிச்சை அளித்த பின்னர் வழக்கம் போல் உணவு சாப்பிட்டார். மேல் சிகிச்சை பெறுவதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் ஓய்வில்லாமல் கலந்து கொண்டதால் தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்று கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications