பக்கத்து வீட்டு பெண்ணின் அவதூறு பேச்சால் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: பக்கத்து வீட்டு பெண் அவதூறாக பேசியதால் மனம் உடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை, பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாலை. இவரது மகள் கன்னி. இவர் காட்டுப் பகுதியில் விறகு பொறுக்க சென்ற போது அந்த பகுதியை சேர்ந்த மேலும் சில பெண்களும் காட்டுப் பகுதிக்கு விறகு எடுக்க சென்றனர்.
அப்போது கன்னிக்கும் மற்றொரு பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அந்த பெண் கன்னியை மிகவும் அவதூறாக பேசினாராம்.
இதனால் மனம் உடைந்த கன்னி நேற்று தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய கன்னி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications