துபாய்: கைதிகள் மோதல்-ஆணுறுப்பு துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் உள்ள சிறையில், கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் ஒரு கைதியின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது.
ரஸ் அல் காமா என்ற இடத்தில் உள்ள சிறையில்தான் இந்த பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது.
அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கிடையே திடீரென மோதல் மூண்டது. இந்த மோதலில் சில கைதிகள் சேர்ந்து ஒரு கைதியின் ஆணுறுப்பைத் துண்டித்து விட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தக் கைதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
என்ன காரணத்திற்காக இந்த சண்டை நடந்தது, ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட கைதி யார், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
கூர்மையான கத்தியால் அந்தக் கைதியின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் கத்தியை வெளியிலிருந்து ரகசியமாக உள்ளே கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications