பாக். தேர்தலில் பெனாசிர், ஷெரீப் வேட்பு மனு தாக்கல்

பாகிஸ்தானில் வரும் ஜனவரி 8ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் பெனாசிர் பூட்டோ வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தலைப் புறக்கணிப்பதா, இல்லையா என்பதை நவாஸ் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் முதலில் வேட்பு மனு தாக்கல் செய்வது, பின்னர் முடிவெடுப்பது என்று நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.
அதன்படி நேற்று நவாஸ் ஷெரீப்பும், அவரது தம்பி ஷாபாஷ் ஷெரீப்பும் லாகூரில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பெனாசிர் பூட்டோ கராச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் போட்டியிடவிருப்பது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.
இதுதவிர சொந்த மாநிலமான சிந்து மாகாணத்தில் உள்ள லர்காணா உள்ளிட்ட 3 தொகுதிகளில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications