கல்வி: திருச்சி மாவட்டத்திற்கு ரூ.17.76 கோடி ஒதுக்கீடு
திருச்சி: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தமிழக அரசு ரூ.17.76 கோடி ஒதுக்கியுள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி அருகே மண்ணுடையன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது,
திருச்சி மாவட்டத்தில் 132 அரசு பள்ளிகளின் கட்டடங்கள் ரூ.5.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இது தவிர மேலும் 17 பள்ளிகளின் கட்டடங்கள் ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன.
இந்த மாவட்டத்திற்கு மட்டும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கு அரசு ரூ.17.76 கோடியை கல்விக்காக ஒதுக்கியுள்ளது என்றார்.
பின்னர் வளநாட்டில் இலவச கலர் டிவி மற்றும் இணைப்புடன் கூடிய சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் இதுவரை 78,094 குடும்பங்களுக்கு இலவச கலர் டிவிக்களும், 11,741 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பும்-சிலிண்டெர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications