டிவி நடிகையை அடைத்து வைத்து விபச்சாரம்-2 பெண்கள் கைது
சென்னை: டிவி நடிகைக்கு சினிமாவில் சான்ஸ் வாங்கித் தருவதாகக் கூறி வீட்டில் அடைத்து வைத்து மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கே.கே.நகர் பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலையடுத்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார் அதை கண்காணித்தனர். விபச்சாரம் நடப்பது உறுதியானதையடுத்து ஒரு போலீஸ்காரர் மாறுவேடத்தில் உள்ளே சென்றார்.
அங்கிருந்த கன்னிகா என்ற பெண் போலீஸ்காரரிடம் ரேட் பேசிய பின் தேவி என்ற பெண்ணை அவருடன் ஒரு அறைக்குள் அனுப்பினார். இதையடுத்து உள்ளே புகுந்த போலீஸ் படை இருவரையும் கைது செய்தனர்.
வீட்டை சோதனையிட்ட போலீசார் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிந்து(22), பாரதி(20) ஆகிய பெண்களை மீட்டனர்.
இதில் பாரதி குலவிளக்கு, குடும்பம் போன்ற டிவி சீரியல்களில் நடித்தவர் ஆவார். இவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து வந்த கன்னிகா அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
அம்பிகா, ராதா ஆகியோருக்கு டூப் போட்டவராம் இந்த கன்னிகா. திரையுலகில் இவருக்கு பலரைத் தெரியும் என்பதால் இவரை நம்பி வந்து மோசம் போயுள்ளனர் பாரதியும் சிந்துவும்.
மீட்கப்பட்ட சிந்து, பாரதி இருவரும் மைலாப்பூர் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.