காயல்பட்டிணம் நகராட்சித் தலைவர் திடீர் ராஜினாமா
காயல்பட்டிணம்: காயல்பட்டிணம் நகராட்சி கூட்டத்தில் நகராட்சித் தலைவர் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் பாதியில் முடிந்தது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சதகதுல்லா, நிர்வாக அதிகாரி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் காசிராஜன், கணேசன்பால்ராஜ், ரங்கநாதன் உள்பட பலர் எழுந்து,
ரோடு வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, கிணறுகள் தூர் வாருதல் ஆகிய பணிகள் குறித்து நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை ஏன் அெஜன்டாவில் சேர்க்கவில்லை.
கடந்த 10 தினங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியிடம் அனுமதி கேட்டு அவரை சந்திக்க சென்றோம். அப்போது நகராட்சித் தலைவர் வராததால் மத்திய அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்து விட்டார்.
இதனால் எம்.பி உள்ளுர் மேம்பாட்டு நிதியை வளர்ச்சி பணிகளுக்கு பெற முடியவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த நகராட்சித் தலைவர் வாவு செய்யது அப்துல் ரகுமான் சொந்த காரணங்களுக்காக தனது தலைவர் பதவியை ராஜினமா செய்வதாக கடிதம் எழுதி அதை நிர்வாக அதிகாரி சுந்தரத்திடம் கொடுத்தார். நகராட்சித் தலைவரின் இந்த திடீர் ராஜினாமா முடிவை கவுன்சிலர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து எந்த முடிவும் எடுக்காமல் நகராட்சி கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
நகராட்சித் தலைவரின் ராஜினமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது குறித்து எதையும் நிர்வாக அதிகாரி தெரிவிக்கவில்லை.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications