மர்ம காரில் 5 கிலோ கஞ்சா!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரை அடுத்த குளித்தலையில் மர்ம காரில் இருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் கைபற்றினார்கள்.
குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி என்ற கிராமத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு ஒரு காரில் 5 பேர் வந்தனர். காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தவர்கள் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலில் இறங்கினர்.
பின்னர் காரை அப்படியே நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். நான்கு நாட்கள் ஆகியும் வந்து காரை எடுக்கவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். குளித்தலை டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், எஸ்ஐ கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காரை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அப்போது அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது. கார் யாருடையது, அதில் வந்தவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு போலீசார் விடை தேடிக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications