சென்னை சில்க்சின் ரூ.40 லட்ச சேலை!!

தமிழகத்தின் பல இடங்களில் கிளைகளை நிறுவியுள்ள சென்னை சில்க்ஸ், தங்கம், வைரம், பிளாட்டினம், மரகதம், பவளம் பதித்த பட்டு சேலையை தயாரித்துள்ளது. இந்த சேலையை சென்னையில் சுஹாசினி அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் துணை பொது மேலாளர் கூறுகையில்,
12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ரவி வர்மாவின் 11 ஓவியங்களுடன் இந்த சேலையை வடிவமைத்துள்ளோம். இந்த சேலையின் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களை சேர்ந்த பெண்கள் இசைக் கருவிகளுடன் அணி வகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களுடன் ஒவ்வொரு பார்டரிலும் இடம் பெற்றுள்ளன.
எங்கள் நிறுவனம் இதற்கு முன்னர் 66,794 வண்ணங்களை கொண்ட பட்டு சேலையை அறிமுகப்படுத்தி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. எங்கள் நோக்கம் இந்த சேலையை தயாரித்ததன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதே.
இந்த சேலையை 30 தலைசிறந்த நெசவாளர்கள் 7 மாதங்களாக உழைத்து இதை தயாரித்துள்ளனர் என்றார்.
இந்த சேலை அறிமுகப்படுத்தும் விழாவில் நடிகை ஷோபனா, நடிகர் ஜீவா, கவிஞர் வைரமுத்து, பின்னணி பாடகி பி.சுசீலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்போதே இந்த சேலை குறித்து பலரும் ஆர்வத்துடன் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனராம்.
இந்த சேலைக்கு விரைவிலேயே ஆர்டர்கள் குவியும் என நம்புகிறது சென்னை சில்க்ஸ்.












Click it and Unblock the Notifications