மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயர்-டாக்டர் கிருஷ்ணசாமி உண்ணாவிரதம்
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயரை சூட்ட வேண்டும் என்று வலியுறுத்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மதுரையில் உண்ணாவிரதம் இருந்தார்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள மண்டேலா நகரில் தியாகி சுந்தரலிங்கம் சிலை அமைக்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயரை சூட்டவேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதுரை தல்லாகுளத்தில் உள்ள தந்தி அலுவலகம் முன்பாக கிருஷ்ணசாமி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
மதுரை விமான நிலையத்திற்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதில் 2,500 ஏக்கர் நிலங்கள் தலித் மக்களுக்கு சொந்தமானது. எனவே தான் விமான நிலையத்திற்கு இமானுவேல் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்கிறோம்.
இதனை வலியுறுத்தி டிசம்பர் 15ம் தேதி பிரதமருக்கும், முதல்வருக்கும் தபால் கார்டு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications