அரவாணிகள் பிரச்சனை-பொது விசாரணை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் வரும் டிசம்பர் 20ம் தேதி உள்ளாட்சிகளில் பொறுப்புகளில் உள்ள தலித் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து பொது விசாரணை நடக்கவுள்ளது.
தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவராக ராமாத்தாள் பொறுப்பேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் தமிழக மகளிர் ஆணையம் சார்பில் திருச்சியில் டிசம்பர் 17ம் தேதி அரவாணிகள் சந்திக்கும் பிரச்சனைகள், சமூக அவமதிப்பு, பாலியல் தொல்லை, ஈவ் டீசிங், சொத்து உரிமை பாதிப்பு, தனி வீடு எடுத்து தங்கும்போது உள்ள பிரச்சனைகள் போன்றவை குறித்து பொது விசாரணை நடத்தவுள்ளார்.
அதே போல டிசம்பர் 20ம் தேதி உள்ளாட்சிகளில் பொறுப்பில் உள்ள தலித் பெண் தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் சந்திக்கும் பிரச்சைகள் குறித்தும் பொது விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications