புலிகள் தாக்குதல் பீதி: கொழும்பில் ராணுவம் குவிப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த பீதி நிலவுவதால், கொழும்பு நகரில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் சமீபத்தில் அமைச்சரும், தமிழ் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். டக்ளஸ் அதிர்ஷ்டவசமாக தப்பிநார்.
பெண் விடுதலைப் புலி ஒருவர் வெடிகுண்டுடன் வந்து வெடிகுண்டை வெடிக்கச் செய்த அந்த சம்பவத்தின் நேரடிக் காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையடுத்து கொழும்பில் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதையடுத்து கொழும்பு நகரம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கணக்கான தமிழர்களை, கைது செய்து வருகின்றனர். நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸாருக்குப் பதில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 15 ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications