அதிபர் முஷாரப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: 2வது முறையாக பாகிஸ்தான் அதிபராகியுள்ள முஷாரப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முஷாரப்புக்கு மன்மோகன் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்திய அரசு சார்பிலும், இந்திய மக்களின் சார்பிலும் உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது தேர்வின் மூலம் இரு நாடுகளின் உறவுகள் சீர்படும், பிராந்தியத்தில் அமைதி நிலவும் என்று நம்புகிறேன்.
இந்திய, பாகிஸ்தான் உறவில் புதிய அத்தியாயத்தை செயல்படுத்த உங்களுக்கு எனது அரசின் முழு ஆதரவும் இருக்கும் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications