பாபர் மசூதி தினம்: தமிழகம் முழுவதும் பலர் கைது
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படஜ்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கபப்ட்டதன் 15வது ஆண்டு தினம் டிசம்பர் 6ம் தேதி வருகிறது. இதையடுத்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இரவு நேர ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன ரோந்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை நகரில் இரவு பகலாக போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரைக் கைது செய்து வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதிக்கு இன்னும் 4 நாட்கள் இருந்தாலும்
அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
வரும் 4ம் தேதியிலிருந்து 6ம் தேதி வரை சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.
சென்னை மட்டுமில்லாமல் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications