கன மழை-சென்னை, திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: வட தமிழகத்தில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடபட்டுள்ளது.
சென்னையில் நேற்று பகல் முழுவதும் மழை தூறியது. நள்ளிரவில் கன மழை பெயத்தால் நகரில் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கியுள்ளது.
சென்னை தவிர காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்து பல இடங்களில் வெள்ளக்காடான நிலை நிலவுகிறது.
இதையடுத்து இன்று பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ஜெகநாதன் கூறியுள்ளார்.
ஆனால், விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு முன்பே இன்று காலை மாணவ, மாணவிகள் மழையிலேயே பள்ளிகளுக்கு கிளம்பிவிட்டனர். அங்கு சென்ற பின்னரே பள்ளி மூடப்பட்டது தெரிந்து வீடுகளுக்குத் திரும்பினர்.
இந் நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும் எனலும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications