மத உணர்வுகளை புண்படுத்தியதாக அனில் அம்பானி மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: சீக்கிய மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் எஸ்.எம்.எஸ். வந்ததற்காக அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவன அதிகாரிகள் நான்கு பேர் மீது லக்னோ போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லக்னோவில் உள்ள நாகா காவல் நிலையத்தில் அப்பகுதி சீக்கிய குருத்வாரா நிர்வாக கமிட்டியின் தலைவர் ராஜேந்திர சிங் பாகா புகார் கொடுத்துள்ளார். அதில், தனக்கு ரிலையன்ஸ் செல்போனிலிருந்து சீக்கிய மதத்தினரை இழிவுபடுத்தும் வகையிலான எஸ்.எம்.எஸ். வந்ததாகவும், இதற்காக அனில் அம்பானி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இதையடுத்து அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர், உ.பி. மாநில தலைமை மேலாளர் மற்றும் பிராந்திய மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications