5 பாம்பன் மீனவர்களை இலங்கை கடற்படை கடத்தியது
ராமேஸ்வரம்: தலைமன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சமி மடம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்துக் கடத்திச் சென்றதால் ராமேஸ்வம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ளது தங்கச்சிமடம். இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நேற்று இரவு தலைமன்னார் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் வந்து 5 மீனவர்கள் இருந்த படகை சுற்றி வளைத்தனர். பின்னர் வானத்தை நோக்கி இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து சில மீனவர்கள் வேகமாக தப்பி வந்து விட்டனர்.
ஆனால் தங்களிடம் சிக்கிக் கொண்ட 5 மீனவர்களையும் சரமாரியாக அடித்து உதைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று விட்டனர்.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பெரும் பதட்டத்திலும், கோபத்திலும் உள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை மீட்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications