ரேசன் அரிசி கடத்தல்-சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை

சென்னை: புதுச்சேரி ரயில் நிலையத்தில் 2,000 டன் தமிழக ரேசன் அரிசி பிடிபட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் கன ஜோராக நடந்து வருகிறது. இதனை குடிமைப் பொருள் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படவிருந்த 2,000 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அது தமிழக ரேசன் அரிசி என தெரியவந்தது.
இந்த ரேசன் அரிசியை கடத்திய கும்பல் அதை வாங்க தனியார் வங்கியில் ரூ. 10 கோடி கடன் பெறப்பட்டதும் தெரியவந்தது.
இந்த கடத்தலில் ஆளும் தரப்புக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழகம் தவிர புதுச்சேரியும் சம்பந்தப்பட்டுள்ளதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள், விவரங்களையும் சிபிஐ இயக்குனர் விஜய் சங்கருக்கு தமிழக அரசு கடந்த 23ம் தேதியே அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியும் சிபிஐக்குப் பரிந்துரை:
இதற்கிடையே, அரிசி கடத்தல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க புதுச்சேரி அரசும் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கூறுகையில், இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் முகுந்த் மித்திக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
ஆளுநர் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது தொடர்பான கடிதத்தை விரைவில் அனுப்புவார் என நம்புகிறேன் என்றார் அவர்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications