ரேசன் அரிசி கடத்தல்-சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை

சென்னை: புதுச்சேரி ரயில் நிலையத்தில் 2,000 டன் தமிழக ரேசன் அரிசி பிடிபட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் கன ஜோராக நடந்து வருகிறது. இதனை குடிமைப் பொருள் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படவிருந்த 2,000 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அது தமிழக ரேசன் அரிசி என தெரியவந்தது.
இந்த ரேசன் அரிசியை கடத்திய கும்பல் அதை வாங்க தனியார் வங்கியில் ரூ. 10 கோடி கடன் பெறப்பட்டதும் தெரியவந்தது.
இந்த கடத்தலில் ஆளும் தரப்புக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழகம் தவிர புதுச்சேரியும் சம்பந்தப்பட்டுள்ளதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள், விவரங்களையும் சிபிஐ இயக்குனர் விஜய் சங்கருக்கு தமிழக அரசு கடந்த 23ம் தேதியே அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியும் சிபிஐக்குப் பரிந்துரை:
இதற்கிடையே, அரிசி கடத்தல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க புதுச்சேரி அரசும் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கூறுகையில், இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் முகுந்த் மித்திக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
ஆளுநர் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது தொடர்பான கடிதத்தை விரைவில் அனுப்புவார் என நம்புகிறேன் என்றார் அவர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications