Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடியக்கரை சரணலாயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் வருகை குறைவு

Subscribe to Oneindia Tamil


தஞ்சாவூர்: நாகப்பட்டனம் மாவட்டம் கோடியக்கரையில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கு இந்த ஆண்டு மழைக் காலத்தில் குறைந்த அளவிலான வெளிநாட்டுப் பறவைகளே வந்துள்ளதாக சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது கோடியக்கரை. இங்கு பறவைகள் சரணாலயம் உள்ளது. மழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்குள்ள சரணாலயத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் பல வந்து குவியும்.

குறிப்பாக ஆர்டிக், அண்டார்டிக் ஆகிய பிராந்தியங்களிலிருந்தும், ரஷ்யா, ஐரோப்பாவிலிருந்தும் அரிய வகை பறவைகள் இங்கு முகாமிட்டிருக்கும்.

அந்தப் பகுதிகளில் வெப்ப நிலை குறைவதன் காரணமாக அங்கிருந்து இங்கு அவை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பறவைகளின் வருகை குறைந்த அளவிலேயே உள்ளதாக கோடியக்கரை பறவைகள் சரணாலய ஆய்வுக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தட்பவெப்ப நிலை மாற்றமே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது.

கோடியக்கரை சரணாலயத்தில், மத்திய அரசு நிதியுதவியுடன் புதிய ஆய்வு மையம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+