15ம் தேதி முதல் மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பு

மதுரை: மதுரையில் நிறுவப்பட்டுள்ள பாஸ்போர்ட் அலுவலகம் வருகிற 15ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட அலுவலகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தற்போது சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் முழு அளவிலான பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. கோவையில் சமீபத்தில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையில் புதிய பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மதுரையிலும் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்கப்படும் என சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் தொடர்பான பணிகள் தொடங்கின. பாஸ்போர்ட் அலுவலகத்திற்காக ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு அரசு அலுவலகம் ஒதுக்கப்பட்டது.
இந்த அலுவலகம் ரூ. 50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகம் முழுமையும் குளிரூட்டப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட முதல் தமிழக பாஸ்போர்ட் அலுவலகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அலுவலகத்தில் அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. காத்திருப்போருக்கான தனி அறை, குழந்தைகளுக்கான தனி அறை என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வருகிற 15ம் தேதி இந்த அலுவலகம் திறக்கப்படுகிறது. அலுவலகத்தை பாஸ்போர்ட் அதிகாரி சுவாமிநாதன் நேற்று பார்வையிட்டார். பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போருக்கு உடனடியாக வழங்கும் வகையில் இங்கு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அப்போது சுவாமிநாதன் தெரிவித்தார்.
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
மதுரையில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ஆட்டோவை ரிசர்வ் செய்ய போட்டா போட்டி! Auto ஓனர் காட்டில் மழை! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
மதுரை ஏர்போர்ட் சர்வதேச விமான நிலையமாகிறது.. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு ஒப்புதல் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications