சென்னை சிறையில் கைதியிடம் ரூ.1 லட்சம் மதிப்பு செல்போன்
சென்னை: சென்னை மத்திய சிறைச்சாலைக்குள் புதருக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போனை அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகள் செல்போன் மூலம் வெளியில் நடமாடும் தங்களது கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டு வருகின்றனர். இந்த செல்போன்களை சிறைக்குள் கொண்டு செல்ல சிறைக் காவலர்கள் தான் லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவி வருகின்றனர்.
இந் நிலையில் அவ்வப்போது தமிழகத்தில் அனைத்து மத்திய சிறைகளிலும் அவ்வப்போது அதிகாரிகள் சோதனை நடத்தி ஏராளமான செல்போன்களை கைதிகளிடமிருந்து கைப்பற்றி வருகின்றனர்.
அதே போல சென்னை புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை கமிஷனர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது முதல் வகுப்பு கைதிகளுக்கான சிறை வளாகத்தின் பின்புறம் உள்ள புல்வெளியில் விலை உயர்ந்த செல்போன் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டு தயாரிப்பான இந்த செல்போனின் மதிப்பு ரூ. 1 லட்சத்திற்கும் மேல் ஆகும்.