மதுரையில் வாலிபர் கடத்தி கொலை
மதுரை: மதுரையில் காணாமல் போன வாலிபர் ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த ராமசாமி மகன் காளிமுத்து (18). இவரை கடந்த செப்டம்பர் 8ம் தேதியன்று அவரின் நண்பர்களான காந்தி, கண்ணன் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் இரவு வெகு நேரமாகியும் காளிமுத்து வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர்.
அந்த புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் கீரைத்துரை போலீசார் வழக்குப் பதிவு காளிமுத்து காணாமல் போனது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பாக கமுதியை அடுத்த கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் காளிமுத்துவை முன் விரோதம் காரணமாக கோவிந்தராஜ், ஈஸ்வரன், பூமி, குரு, வழிவிட்டான் சிவசுப்பிரமணியன், வீரபத்திரன், பல்லு ஈஸ்வரன் ஆகியோர் கடத்தி கொலை செய்தது தெரியவந்தது.
அதன் பேரில் அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
காணாமல் போன வாலிபரை கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications